செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். 1,841 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
1,841 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,841 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 379-ஆக உயர்ந்துள் ளது. இவர்களில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 941 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,582-ஆக உயர்ந்துள்ளது. 17,856 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 560 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆயிரத்து 287-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 80 ஆயிரத்து 763 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,285-ஆக உயர்ந்துள்ளது. 5,239 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story