செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 Jan 2022 1:49 PM GMT (Updated: 24 Jan 2022 1:49 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். 1,841 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

1,841 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,841 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 379-ஆக உயர்ந்துள் ளது. இவர்களில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 941 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,582-ஆக உயர்ந்துள்ளது. 17,856 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 560 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆயிரத்து 287-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 80 ஆயிரத்து 763 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,285-ஆக உயர்ந்துள்ளது. 5,239 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story