மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி
கோட்டூர்;
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் மேலத் தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி(வயது60). பெயிண்டரான இவர் நேற்று காலை மன்னார்குடிக்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் விக்கிரபாண்டியத்தில் இருந்து புறப்பட்டு சேந்தமங்கலம் நோக்கி சென்றார். அப்போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த தங்கபாண்டியன் மீது பக்கிரிசாமியின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த பக்கிரிசாமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்த தங்கபாண்டியன் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story