அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் திருமண நிதிஉதவி வழங்கும் விழா


அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் திருமண நிதிஉதவி வழங்கும் விழா
x
தினத்தந்தி 25 Jan 2022 2:20 PM GMT (Updated: 25 Jan 2022 2:20 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி வழங்கும் விழா நடந்தது.

இதற்கு அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஓரத்தி கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி வரவேற்பு உரை பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.பி. ஜி.செல் வம், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கினர். மொத்தம் 170 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கப்பட்டது. முடிவில் சமூக நல விரிவாக்க அலுவலர் பவானி நன்றி கூறினார்.


Next Story