கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி


கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
x
தினத்தந்தி 26 Jan 2022 12:52 AM IST (Updated: 26 Jan 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்

கரூர்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல கரூர் மாவட்டத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 234 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 176 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். தற்போது 1,448 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 More update

Next Story