நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 25 Jan 2022 7:33 PM GMT (Updated: 25 Jan 2022 7:33 PM GMT)

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம்பெறும் பகுதிகளான ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, ரோசல்பட்டி ரோடு, கம்மாபட்டி, சத்யமூர்த்தி ரோடு, பாண்டியன் நகர், பட்டேல் ரோடு, ஏ.ஏ.ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, பேராசிரியர் காலனி, சாஸ்திரி நகர், ெரயில்வே பீடர் ரோடு மெயின் பஜாரில் தெப்பம் வரை, காசுக் கடை பஜார், காந்திபுரம் தெரு, அழகர்சாமி தெரு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம்  இருக்காது. அதேபோல நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி கிழக்கு, மேற்கு, சத்திரரெட்டியபட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் எனவும் மின்வாரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோன்று மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இத்துணை மின்நிலையத்தில் மின் வினியோகம் பெறும் பகுதிகளான மல்லாங்கிணறு, வலையங்குளம், நந்திகுண்டு, மேல துலுக்கன்குளம், கெப்பிலிங்கம்பட்டி, அழகியநல்லூர், வரலொட்டி, வழுக்கலொட்டி, நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

Next Story