வீட்டின் முன் தண்ணீர் தெளிப்பதில் தகராறு: 2 பெண்கள் கைது

x
தினத்தந்தி 26 Jan 2022 2:33 AM IST (Updated: 26 Jan 2022 2:33 AM IST)
தண்ணீர் தெளிப்பதில் தகராறு 2 பெண்கள் கைது
பேட்டை:
நெல்லை சுத்தமல்லியை அடுத்த பழவூர் சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்த முருகன் மனைவி முருகம்மாள் (வயது 40). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ராமலிங்கம் மனைவி பொன்னம்மாள் (41). இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டின் முன் தண்ணீர் தெளிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இருதரப்பு புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சுத்தமல்லி போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





