சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை


சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Jan 2022 10:24 PM GMT (Updated: 25 Jan 2022 10:24 PM GMT)

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் வேல்சாமி மகன் திருமலைக்குமார் (வயது 40). விவசாயியான இவர் சம்பவத்தன்று வழக்கம்போல் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். மறுநாள் காலை பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரது வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Next Story