தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 390 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 390 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 390 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்ட 223 பேர் நேற்று குணமடைந்தனர். 2,747 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 33,346 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 281 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story