வெடி மருந்து வைத்திருந்த வாலிபர் கைது


வெடி மருந்து வைத்திருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2022 6:48 PM GMT (Updated: 26 Jan 2022 6:48 PM GMT)

வெடி மருந்து வைத்திருந்த வாலிபர் கைது

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் போலீசார் சமயசங்கிலி நீர்மின் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அதில் மீன் பிடிப்பதற்காக அனுமதியின்றி வெடி மருந்துகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையில் அவர் ஆவத்திபாளையத்தை சேர்ந்த ராஜசேகர் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.  

Next Story