கிணற்றில் மூழ்கி மாணவர் சாவு

உசிலம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் இறந்தார்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே கீரிபட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்.இவருடைய மகன் முகுன்ராஜ் (வயது 14).9-ம் வகுப்பு மாணவர். இந்த நிலையில் நேற்று மாலை துரைப்பாண்டி தனது மகன் முகுன்ராசுடன் தனது சொந்த தோட்டத்தில் உள்ள 70 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கிணற்றுக்குள் குளிக்க குதித்த முகுன்ராஜ் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் பதற்றமான துரைப்பாண்டி, உறவினர்கள் உதவியுடன் கிணற்றுக்குள் குதித்து தேடிப்பார்த்தும் முகுன்ராசை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து உசிலம்பட்டி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் குதித்து சுமார் 2 மணி நேரப்போரோட்டத்திற்கு பின் சிறுவன் முகுன்ராஜ் உடலை மீட்டனர். இது குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தை கண் எதிரில் மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story