தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது


தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 26 Jan 2022 10:05 PM GMT (Updated: 26 Jan 2022 10:05 PM GMT)

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது.

ஈரோடு
ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல், கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த நெல் மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரெயில் மூலம் நேற்று காலை ஈரோடு ரெயில்வே பணிமனைக்கு வந்தடைந்தது. இதனை சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றப்பட்டு, நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக்கிய பின்னர் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story