ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு


ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 27 Jan 2022 5:31 PM IST (Updated: 27 Jan 2022 5:31 PM IST)
t-max-icont-min-icon

ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு போனது தெரியவந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33), இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6½ பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து மணிகண்டன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story