போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2022 11:16 PM IST (Updated: 27 Jan 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் நாகல்நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மத்திய சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் ராமநாதன், பொருளாளர் ஜோசப்அருளானந்தம், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை உடனே இறுதிபடுத்த வேண்டும். மேலும் அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story