போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பூசாரிப்பாளையத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி கடந்த 4.6.2021 அன்று வீட்டில் தனியாக இருந்தார். அவரது பெற்றோர் வெளியில் வேலைக்கு சென்றிருந்தனர். இதையறிந்த அதே கிராமத்தை சேர்ந்த சேகர் மகன்கள் பாலு (வயது 30), பாரதிராஜா (29) ஆகிய இருவரும் அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
உடனே சிறுமி கூச்சல் போட்டதும் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பின்னர் இதுபற்றி அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பாலு, பாரதிராஜா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story