மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 28 Jan 2022 1:09 AM IST (Updated: 28 Jan 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாத்தூர், 
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில்
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். 
மாரியம்மன் கோவிலில் வழக்கத்தை காட்டிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 
சாமி தரிசனம்
நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், தேன் ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்பு வழிபாட்டில் விருதுநகர் மட்டுமன்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரசின் விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர்கள் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 
சாத்தூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் தை மாதத்தையொட்டி சிறப்பு பூைஜ நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story