துப்பட்டா சிக்கி தலை துண்டாகி மாணவி பலி


துப்பட்டா சிக்கி தலை துண்டாகி மாணவி பலி
x
தினத்தந்தி 28 Jan 2022 10:31 PM IST (Updated: 28 Jan 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

அன்னூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதால் தலை துண்டாகி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

அன்னூர்

அன்னூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதால் தலை துண்டாகி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாய் தாய் கண்முன்னே நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உடல்நலக்குறைவு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வடக்கலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 47). டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

 இவருடைய மனைவி வசந்தி (42). இவர்களது மகள் தர்ஷனா (10). இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில் வசந்திக்கும், தர்ஷனாவுக்கும் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவு செய்தனர். 

ஆஸ்பத்திரிக்கு சென்றனர்

சுப்பிரமணி வெளியே சென்றுவிட்டதால் வசந்தி தனது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேஷ் என்பவரை ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச்செல்லுமாறு கூறினார். இதையடுத்து  வசந்தியும், தர்ஷனாவும் அன்னூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு ராஜேசுடன் சென்றனர். 

பின்னர் அங்கு சிகிச்சை முடிந்த பின்னர் வீடு திரும்பினார்கள். ராஜேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்ட, பின்னால் வசந்தி அமர்ந்து இருந்தார். அவர்களின் நடுவில் தர்ஷனா இருந்தார். 

தலை துண்டாகி பலி

அவர்கள் 3 பேரும் அன்னூரை கடந்து ராம்நகர் அருகே வந்த போது திடீரென்று தர்ஷனா கழுத்தில் அணிந்து இருந்த துப்பட்டா, அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியது. 

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் தர்ஷனா கழுத்து இறுகியதால் தலை துண்டாகி ரோட்டில் விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வசந்தி அலறினார். 

உடனே ராஜேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் வசந்தி ஓடிச்சென்று பிணமாக கிடந்த தனது மகளின் உடலை பார்த்து கதறி துடித்தார். 

போலீசார் விசாரணை

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் இது குறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தாய் கண் முன்பே நடந்த இந்த சம்பவம் அந்தப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

1 More update

Next Story