வீடு புகுந்து நகை திருட்டு
வீடு புகுந்து நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் கீழத் தெருவை சேர்ந்தவர் செந்தில் ராணி (வயது 47). சமையல் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மகன்களுடன் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது வீட்டை திறக்க முடியவில்லை. உடனே அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து வீட்டை திறந்தனர். வீட்டினுள் சென்று பார்த்த போது பின்பக்க கதவு திறக்கப்பட்டு இருந்தது. மேலும் அவர் வீட்டில் ஒரு பிளாஸ்டிக் வாளியில் வைத்திருந்த 4 பவுன் நகைகள், 2 வெள்ளி கொலுசுகள் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்ராணி இதுகுறித்து பார்த்திபனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story