பொதுமக்கள் அனைவரும் 2 முகக்கவசம் அணிய வேண்டும்


பொதுமக்கள் அனைவரும் 2 முகக்கவசம் அணிய வேண்டும்
x
தினத்தந்தி 29 Jan 2022 6:41 PM IST (Updated: 29 Jan 2022 6:41 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவலை தடுக்க ஆட்டோவில் விழிப்புணர்வை நகராட்சி அதிகாரிகள் ஏற்படுத்தி வருவதோடு, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் 2 முகக்கவசம் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவரை வழங்கினார்கள்.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவலை தடுக்க ஆட்டோவில் விழிப்புணர்வை நகராட்சி அதிகாரிகள் ஏற்படுத்தி வருவதோடு, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் 2 முகக்கவசம் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவரை வழங்கினார்கள்.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, வதம்பச்சேரி, ஜல்லிபட்டி, செஞ்சேரிப்புத்தூர்,பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம் உள்பட மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாரத்திற்கு மிக அதிகபட்சமாக 10 எண்ணிக்கைக்குள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில், கடந்த 2 வாரத்திற்கு மேலாக தினமும் இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இரவு நேரஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்பட பல்வேறு நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்குமா என்ற அச்சம் சமூக ஆர்வலர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒன்றியத்தில் வதம்பச்சேரி, வாரப்பட்டி, செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி உள்பட பல ஊராட்சிகளில் ஆட்டோக்களில் கொரோனா தடுப்பு குறித்து ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில், பொதுமக்கள், வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

2 முகக்கவசம் அணியவேண்டும்

வீட்டை விட்டு வெளியில் வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். வரிசையில் நின்று பொருட்கள் வாங்க வேண்டும். வரிசையில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கடை ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். பஸ்ஸில் பயணிக்கும்போது 2 முகக்கவசம் அணியவேண்டும். அலுவலக பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றவேண்டும். கடை ஊழியர்கள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கடைகளுக்குள் அதிகப்படியான ஆட்களை அனுமதிக்க கூடாது. நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திக்குசெல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
1 More update

Next Story