தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து இறந்து விட்டார்
பனவடலிசத்திரம்:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளி பகுதியைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன் (வயது 38). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு தமயந்தி என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமயந்தி திடீரென்று இறந்துவிட்டார். அவருடைய இறப்பு பெரியபாண்டியனுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளாக வேலை எதுவும் செய்யாமல் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி பெரியபாண்டியன் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெரியபாண்டியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story