வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Jan 2022 7:46 PM IST (Updated: 30 Jan 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

கயத்தாறு:
கயத்தாறு அருகே அய்யனாரூத்து அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவருடைய மகன் கணேஷ் ராஜா (வயது 32). கருப்பட்டி வியாபாரி. இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. பூங்கொடிக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே கணேஷ்ராஜாவுக்கு கடந்த சில நாட்களாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டதால் நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் நேற்று மதியம் கணேஷ் ராஜா வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீசார் விரைந்து சென்று, இறந்த கணேஷ் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story