கஞ்சா விற்ற வாலிபர் பிடிபட்டார்

தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துமாலைக்கு, முத்தையாபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரது தலைமையிலான போலீசார் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள உப்பாற்று ஓடை அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் அப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல்தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் முகுந்தன் ராஜா (வயது 29) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story