பழுதடைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதை

x
தினத்தந்தி 6 Feb 2022 3:55 PM IST (Updated: 6 Feb 2022 3:55 PM IST)


பழுதடைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதை
உடுமலை தளி சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின்போது, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் பாதையில் தளம் பழுதடைந்துள்ளது.அதனால் இந்த சுரங்கப்பாதை தளத்தில்பாதிக்குமேற்பட்ட பகுதிகள் குண்டும், குழியுமாக உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்கிறவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அதனால் குண்டும், குழியுமாக உள்ள இந்த ரெயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்கும் பணிகளை செய்யவேண்டும் என்று வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire