பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகர் படுகர் காலனியை சேர்ந்த வர் பிரகாஷ்ராஜ். பாரம் தூக்கும் தொழிலாளி. இவர் கீர்த்தனா (வயது 26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்பட 3 குழந்தைகள் உள்ளனர்.
பிரகாஷ்ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது. மேலும் அவர் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 குழந்தைகளையும் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் மனம் உடைந்த கீர்த்தனா நேற்று முன்தினம் இரவு வீட்டின் சமையலறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story