படப்பை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி

படப்பை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் பகுதியில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






