தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர்கள் படுகாயம்

தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி:
தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.
லாரி கவிழ்ந்தது
நாக்பூரில் இருந்து காயில் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோடு மாவட்டத்திற்கு புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த டிரைவர் செந்தில் (வயது 30) ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக சேலம் மாவட்டத்தை சேர்ந்த பூபதி (30) என்பவர் உடன் வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயை கடந்து சென்றபோது சாலையில் தாறுமாறாக ஓடியது.
பின்னர் அந்த லாரி தொப்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே உள்ள செல்போன் கடை முன்பு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய டிரைவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் செல்போன் கடையின் ஷட்டர் மற்றும் சுவர்கள் சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story