பாட்டியை இரும்பு கம்பியால் தாக்கிய பேரன் கைது

x
தினத்தந்தி 26 Feb 2022 5:38 PM IST (Updated: 26 Feb 2022 5:38 PM IST)


மது அருந்த பணம் தர மறுத்ததால் பாட்டியை இரும்பு கம்பியால் தாக்கிய பேரன் கைது
ஆரணி
ஆரணியை அடுத்த பூசிமலைகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 75).
இவரிடம் இவரது பேரன் அமாவாசை என்கிற சிலம்பரசன் (22) மது அருந்த பணம் கேட்டுள்ளார்.
கோவிந்தம்மாள் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சிலம்பரசன் இரும்புக்கம்பியால் கோவிந்தம்மாளை தாக்கினார்.
இது குறித்து கோவிந்தம்மாளின் மகன் தங்கப்பன் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அமாவாசை என்கிற சிலம்பரசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire