தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Feb 2022 1:30 AM IST (Updated: 27 Feb 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேங்கிக்கிடக்கும் குப்பை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து மதுரை மெயின் சாலையில் ஜெயவிலாஸ் பஸ் நிறுத்தம் அருகில் குப்ைபகள் அதிக அளவில் தேங்கிக்கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுவதோடு தொற்றுநோய் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே தேங்கிக்கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். 
முனீஸ்வரன், ராஜபாளையம். 
மூடப்படாத பள்ளம்
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையிலிருந்து மாட்டுதாவணி செல்லும் மெயின் ரோட்டில் பெரிய  பள்ளம் உள்ளது. சாலையில் அமைந்துள்ள இந்த பள்ளமானது வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. இந்த பள்ளத்தினால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி சில சமயங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. எனவே அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துகிருஷ்ணன், ஒத்தக்கடை.
எரியாத தெரு விளக்கு
மதுரை மாவட்டம் திருநகர் 94-வது வார்டில் உள்ள தெரு விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை.  இதனால் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் பெண்கள் அச்சம் அடைகின்றனர்.  சமூக விரோதிகள் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கண்ணன், திருநகர்.
நாய்கள் தொல்லை
  ராமநாதபுரம் மாவட்டம்  கமுதி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சமீபகாலமாக நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை அச்சுறுத்தி வருகின்றது. இதனால் பெண்கள், முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் இந்த நாய்கள் வாகன ஓட்டிகளின் வாகனங்களின் மீது மோதுவதால் விபத்துகளும் ஏற்படுகின்றது. பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
பிரியா, ராமநாதபுரம்.
தெரு விளக்கு தேவை
  விருதுநகர் மாவட்டம் சிவகாசி விளாம்பட்டி கிராமம் பூலாவூரணி சர்ச் ரோடு பகுதியில் தெரு விளக்குகள் இல்லை. ஆதலால் இரவு நேரங்களில் இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும்  வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.  வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களும் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அழகுராஜா, சிவகாசி.
1 More update

Next Story