உக்ரைனில் சிக்கி தவிக்கும் பல்லடம் மாணவரை பத்திரமாக தாய் நாட்டிற்கு மீட்டு கொண்டு வர வேண்டும்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் பல்லடம் மாணவரை பத்திரமாக தாய் நாட்டிற்கு மீட்டு கொண்டு வர வேண்டும்
பல்லடம்:
உக்ரைனில் சிக்கி தவிக்கும் பல்லடம் மாணவரை பத்திரமாக தாய் நாட்டிற்கு மீட்டு கொண்டு வர வேண்டும் என்று மாணவரின் பெற்றோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்
பல்லடம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. பனியன் நிறுவனம் நடத்திவருகிறார். இவரது மகன் சஞ்சீவி (வயது 22). இவர் உக்ரைன் நாட்டில் மெக்காலே நகரில் பிளாக்சி மருத்துவ கல்லூரியில் 4 -வது ஆண்டு படித்து வருகிறார். தற்போது ரஷியா-உக்ரைன் இடையே கடுமையான போர் நடந்துவரும் நிலையில் அங்கு தங்கி படிக்கும் இந்திய மாணவர்களை அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்த நிலையில் சஞ்சீவ் தங்கி இருக்கும் பகுதியில் ரஷிய ராணுவம் குண்டு வீசி நடத்திவரும் தாக்குதல் சம்பவங்களை படம்பிடித்து தனதுதந்தையின் செல்போனிற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் வாட்ஸ்அப் ஆடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியிலேயே விளக்குகளை அணைத்து வைத்துக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல உணவுக்கு வழியின்றி ராணுவத்தின் எச்சரிக்கை ஒலி மற்றும் போர் விமானங்களின் சத்தம் கேட்டால் பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்து கொண்டு இருப்பதாகவும், எனவே இந்திய அரசும், தமிழக அரசும், உயிருடன் பத்திரமாக மீட்டு தாய் நாட்டிற்கு அழைக்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கோரிக்கை
இதுகுறித்து சஞ்சீவின் தந்தை மூர்த்தி கடந்த 2 நாட்களுக்கு முன் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் உதவி கேட்டு எனது மகனையும் அவனுடன் இருக்கும் மாணவர்களையும் மீட்டுத்தர வேண்டும் என மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது உக்ரைன் நாட்டில் மெக்காலே நகரில் சிக்கி இருக்கும் எனது மகன் உள்பட 300 மாணவர்களை மீட்கும்படி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன். , தமிழக முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் எடுத்து மாணவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என கண்ணீருடன் கூறினார்.
Related Tags :
Next Story