கோவையில் 54 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 28 Feb 2022 8:29 PM IST (Updated: 28 Feb 2022 8:29 PM IST)
கோவையில் 54 பேருக்கு கொரோனா
கோவை
கோவை மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 513 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று ஒரே நாளில் 153 பேர் குணம் அடைந்தனர். அதன்படி இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 139 பேர் குணமடைந்து உள்ளனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 86 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2,614 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் நேற்று கோவையில் மட்டுமே கொரோனாவுக்கு உயிரிழப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 760 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





