விவசாயிகள் சங்கம்-சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள்-தொழிலாளர் விரோத மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் சங்கம்-சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்:
விவசாயிகள்-தொழிலாளர் விரோத மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் சங்கம்-சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
விவசாயிகள்-தொழிலாளர் விரோத மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு விவசாயிகள் சங்கம்-சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குமாரராஜா, சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட தலைவர் கலைமணி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
---
Related Tags :
Next Story