சுல்தான்பேட்டையில் கறிக்கோழி விலை கிடுகிடு உயர்வு

சுல்தான்பேட்டையில் கறிக்கோழி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டையில் கறிக்கோழி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி
தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில், தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.92 முதல் ரூ.95 வரை செலவாகிறது.
கிலோ ரூ.126 ஆக நிர்ணயம்
இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி ரூ.106 இருந்த ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) பண்ணைக் கொள்முதல் தொடர்ந்து சிறிது, சிறிதாக அதிகரித்து தற்போது, பண்ணைக் கொள்முதல் விலை (விற்பனை விலை) என கிடுகிடுவாக உயர்ந்்து உள்ளது.
கடந்த சில தினங்களாக கறிக்கோழிக்கு கிராக்கி ஏற்பட்டு பண்ணை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து, கணிசமான லாபத்தை ஈட்டித்தருவதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தற்போது, சிக்கன் ஸ்டால்களில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.250 முதல் ரூ.280 வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






