தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

x
தினத்தந்தி 15 March 2022 6:48 PM IST (Updated: 15 March 2022 6:48 PM IST)
கிணத்துக்கடவு அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே சிங்கையன் புதூர் கேட்டுக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 70). இவரது மனைவி ரத்தினம் (54). நாராயணசாமி கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் அவதி பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் கிணத்துக்கடவு போலீசார் அங்கு சென்று, நாராயணசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





