திருத்தணி அருகே கல்லூரி மாணவருக்கு அடி-உதை


திருத்தணி அருகே கல்லூரி மாணவருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 24 March 2022 3:08 PM GMT (Updated: 24 March 2022 3:08 PM GMT)

திருத்தணி அருகே கல்லூரி மாணவரை அவரது நண்பர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கி அடித்து உதைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் காலனியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் பிரியன் (வயது 20). இவர் திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பார்ம் இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்ததும் பிரியன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் இருவரும் சீனிவாசபுரம் கூட்டுச் சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே தனியார் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவன் மூர்த்தி என்பவர், முன்விரோதம் காரணமாக லோகேஷை வழிமறித்து தாக்கியுள்ளார். இதை தடுக்க முயன்ற பிரியனை, மூர்த்தி, அவரது நண்பர்கள் வேலு மற்றும் மாணிக்கம் ஆகியோர் உருட்டுக்கட்டையால் தாக்கி அடித்து உதைத்தனர்.

இதில், பலத்த காயம் அடைந்த பிரியன் மயங்கி விழுந்தார். அங்கு இருந்தவர்கள் பிரியனை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து பிரியன் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து, மாணிக்கம், மூர்த்தி மற்றும் வேலு ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story