காஞ்சீபுரம் பெருமாள் கோவிலில் கருட சேவை

x
தினத்தந்தி 28 March 2022 5:53 PM IST (Updated: 28 March 2022 5:53 PM IST)
பிரமோற்சவத்தின் முக்கிய விழாவான கருடசேவை உற்சவம் நேற்று நடைபெற்றது.
108 திவ்யதேசத்தில் ஒன்றான பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிரமோற்சவத்தின் முக்கிய விழாவான கருடசேவை உற்சவம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் போது யதோக்தகாரி பெருமாள் மலர் அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது வழிநெடுக பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா நல்லப்பா நாராயணன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





