தேசிய அளவிலான போட்டியில் காஞ்சீபுர மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்

தேசிய அளவிலான போட்டியில் காஞ்சீபுரம் மாணவி வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தனிநபர் பிரிவில் ஜம்ப்ரோப் (ஸ்கிப்பிங்) விளையாட்டு தொடர்பான தேசிய அளவிலான போட்டிகள் இந்த மாதம் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் காஞ்சீபுரம் ராணி அண்ணாத்துரை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜனனி (16). இவர் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தனிநபர் பிரிவில் ஜம்ப்ரோப் விளையாட்டில் ஒரு வெள்ளிப்பதக்கமும், ஒரு வெண்கலப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதே போல அதே பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மற்றொரு மாணவியான இனியா (16) இவரும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜம்ப்ரோப் விளையாட்டில் 3 வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளார். இந்திய அளவில் 450 பேரும், தமிழக அளவில் 27 பேரும் கலந்து கொண்டனர்.
இதில் காஞ்சீபுரத்தில் இருந்து 9 ஆண்கள், 2 பெண்கள் பங்கேற்றிருந்தனர். நீண்ட நேரம் சோர்வில்லாமல் குதித்தல், வேகமாக குதித்தல் என 6 வகைகளில் போட்டிகள் நடைபெற்றன.இதில் காஞ்சீபுரத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 2 மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






