சிறுமுகை வனப்பகுதியில் பவானிசாகர் அணை நீர்தேக்கத்தில் காட்டு யானை இறந்து கிடந்தது


சிறுமுகை வனப்பகுதியில் பவானிசாகர் அணை நீர்தேக்கத்தில் காட்டு யானை இறந்து கிடந்தது
x
தினத்தந்தி 29 March 2022 7:39 PM IST (Updated: 29 March 2022 7:39 PM IST)
t-max-icont-min-icon

சிறுமுகை வனப்பகுதியில் பவானிசாகர் அணை நீர்தேக்கத்தில் காட்டு யானை இறந்து கிடந்தது


மேட்டுப்பாளையம் 

சிறுமுகை வனப்பகுதியில் பவானிசாகர் அணை நீர்தேக்கத்தில் காட்டு யானை இறந்து கிடந்தது.

வனத்துறையினர் ரோந்து

கோவை வனக்கோட்டம் சிறுமுகை அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்பட வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன. வனப்பகுதியில் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டது. 

இதனால் ஏற்பட்ட வறட்சி காரணமாக உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி காட்டு யானைகள் மற்றும்   வன விலங்குகள் இடம் பெயர்கின்றன.

இந்த நிலையில்  சிறுமுகை வனச்சரகம், மோதூர், பெத்திக்குட்டை, காப்புக்காடு பெத்திக்குட்டை பிரிவு மற்றும் பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

யானை இறந்து கிடந்தது

அப்போது காப்புக்காட்டில் இருந்து சுமார் 60 மீட்டர் தொலைவில் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். 

இதை அறிந்த சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் அசோக் குமார், உதவி வனப் பாதுகாவலர் செந்தில்குமார், அரசு வன கால்நடை டாக்டர் சுகுமார் மற்றும் வனப் பணியாளர்கள் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு சென்றனர்.

உடற்கூறு அறிக்கை

அங்கு நீர்த்தேக்கத்தில் இறந்த நிலையில் காட்டு யானை மிதந்து கொண்டிருந்தது. உடனே வனத்துறையினர், அந்த யானையின் உடலை கரைக்கு கொண்டு வந்தனர். 

இதில் இறந்தது 6 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்தது. அந்த யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

யானை இறப்புக்கான காரணத்தை கண்டறிய மாதிரி உடற் பாகங்கள் சேகரிக்கப்பட்டது. இதனால் யானையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரிய வில்லை. 

அந்த யானையின் உடற்கூறு அறிக்கை வந்த பின்னர் தான் இறப்புக் கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
1 More update

Next Story