மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

x
தினத்தந்தி 1 April 2022 3:16 PM IST (Updated: 1 April 2022 3:16 PM IST)
தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி பேராசிரியர் ஒருவரால் மாணவி பாலியல் துன்புறுத்தப்பட்டதாக கூறி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி பாலியல் தொடர்பாக கல்லூரியில் உள்ள புகார்கள் குழு (ஐ.சி.சி.) விசாரணை மேற்கொண்டது. இதன் பின்னரும் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவ-மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு விசாரணையும் ஆவணப்படுத்தப்பட வேண்டும், பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





