அஞ்சுவட்டத்தம்மன் வீதி உலா

x
தினத்தந்தி 1 April 2022 9:54 PM IST (Updated: 1 April 2022 9:54 PM IST)
கீழ்வேளூரில் அஞ்சுவட்டத்தம்மன் வீதி உலா நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த மார்ச் 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ேகாவிலில் உள்ள அஞ்சுவட்டத்தம்மன் நேற்று முன்தினம் இரவு மஞ்சத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) தேரோட்டமும், 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விடையாற்றி விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





