முதியவர் தற்கொலை

x
தினத்தந்தி 5 April 2022 10:00 PM IST (Updated: 5 April 2022 10:00 PM IST)
தேனி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 81). இவர் தனியாக வசித்து வந்தார். வயது முதுமை மற்றும் தனிமை காரணமாக கடந்த 31-ந்தேதி இவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேனி சமதர்மபுரத்தில் வசிக்கும் அவருடைய மகன் பாலாஜி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





