கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 April 2022 12:55 AM IST (Updated: 7 April 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ரிஷிவந்தியம், 

திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் சந்தப்பேட்டை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கருமகாரிய கொட்டகை அருகில் நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சந்தப்பேட்டை காலனியை சேர்ந்த வல்லரசு (வயது 20) என்பது தெரிந்தது. மேலும் அவர் சாராயம் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த சாராயம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 
1 More update

Next Story