எலி மருந்து தின்று கல்லூரி மாணவி தற்கொலை


எலி மருந்து தின்று கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 8 April 2022 12:15 AM IST (Updated: 7 April 2022 9:18 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே எலி மருந்து தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரை காதலித்து ஏமாற்றியதாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்:-

திருவாரூர் அருகே எலி மருந்து தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரை காதலித்து ஏமாற்றியதாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். 

கல்லூரி மாணவி விஷம் தின்று தற்கொலை

திருவாரூர் மாவட்டம் திருவநாதபுரத்தை சேர்ந்த ஆசைத்தம்பி மகள் ஆர்த்தி(வயது 19). இவர், நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டய படிப்பு படித்து வந்தார். கடந்த 5-ந் தேதி ஆர்த்தி, வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) தின்றார். இதில் மயங்கி விழுந்த அவரை பெற்றோர் மீட்டு உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆர்த்தி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து அவருடைய பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:- 

காதல்-கர்ப்பம்

திருவாரூர் அருகே உள்ள கருப்பூர் பகுதியை சேர்ந்த சாவித்(24) என்பவர் ஆர்த்தியை காதலித்து வந்துள்ளார். அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி தனிமையில் ஆர்த்தியை அடிக்கடி சந்தித்து வந்தார். இதனால் கர்ப்பம் அடைந்த ஆர்த்தி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சாவித்திடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் சாவித், திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனால் விரக்தி அடைந்த மாணவி ஆர்த்தி, வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். அவருடைய வயிற்றில் வளர்ந்த 3 மாத கருவும் உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். 

கைது

இந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டுதல், கற்பழிப்பு, பெண்ணை காதலித்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவித்தை கைது செய்தனர்.
1 More update

Next Story