திரிபுராந்தீசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை:
பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் -கோமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ ்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு மகுட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி வீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 14-ந் தேதி (வியாழக்கிழமை) சித்திரை விசு அன்று மாலை 4 மணிக்கு கங்காள நாதர் தேர் வீதி உலா நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். அதைத்தொடர்ந்து பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 16-ந் தேதி காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி இருந்த திரிபுராந்தீசுவரர் கோவில் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. அங்கு 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.
Related Tags :
Next Story