அரசு பஸ் மீது கல்வீசி தாக்கிய மாணவர்கள்

படிக்கட்டில் பயணத்தை கண்டித்ததால் மாணவர்கள் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினர்.
பரமக்குடி,
பரமக்குடியில் இருந்து கமுதக்குடி கிராமத்திற்கு நேற்று மாலை அரசு பஸ் சென்றது. அப்போது அதில் ஏராளமான மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர். உடனே பஸ்சின் கண்டக்டர் திருப்பதி அந்த மாணவர்களை உள்ளே வருமாறு அறிவுறுத்தி உள்ளார். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் பஸ்சின் படிக்கட்டு பகுதியில் தொங்கியபடி பக்க வாட்டு பகுதியை கையால் அடித்து சத்தத்தை எழுப்பியுள்ளனர். உடனே கண்டக்டர் பஸ்சை காட்டுப் பரமக்குடி அரசு மருத்துவமனையின் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி உள்ளார். உடனே பஸ்சில் தொங்கியபடி வந்த 3 மாணவர்கள் அங்கிருந்த கற்களை எடுத்து பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது வீசி எறிந்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக பஸ்சுக்குள் இருந்த பயணிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனே பஸ்சின் டிரைவர், கண்டக்டர் இச்சம்பவம் குறித்து பரமக்குடி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story