டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி


டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 10 April 2022 9:23 PM IST (Updated: 10 April 2022 9:23 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் போலீசார் வருவதை பார்த்து தப்பி ஓடினர்.

நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் போலீசார் வருவதை பார்த்து தப்பி ஓடினர்.
டாஸ்மாக் கடை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பச்சைகுளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வாழாச்சேரி செல்லும் சாலையில் வயல்பகுதியில்  டாஸ்மாக் கடை உள்ளது. 
நேற்று அதிகாலை இந்த டாஸ்மாக் கடையின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். அப்போது கடையின் வாசலில் எரிந்த மின்விளக்குகளை அணைத்துள்ளனர். 
போலீசார் ரோந்து பணி
இந்த நேரத்தில் அந்த வழியாக தேவங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாசன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து  தப்பி ஓடிவிட்டனர். 
 டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த போலீசார்,  உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 
பின்னர் போலீசார் கடைக்கு சென்று பார்த்த போது அங்கு டைல்ஸ் அறுக்கும் எந்திரம் கிடந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
மர்ம நபா்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து தேவங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சரியான நேரத்தில் போலீசார் சென்றதால் டாஸ்மாக் கடையில் இருந்த ஆயிரக்கணக்கான மதிப்பிலான மதுபாட்டில்கள் தப்பின. இதனால் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
கடந்த ஆண்டு இந்த டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. 
1 More update

Next Story