பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆக்கூர் முக்கூட்டு பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருக்கடையூர்
மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் முக்கூட்டு பஸ் நிலையம் முன்பு புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியினர் பெட்ரோல், டீசல், சமையல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் தொல்காப்பியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாராயணன், மாநில பொருளாளர் கலியமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஆக்கூர் பகுதியில் குண்டும்-குழியுமாக உள்ள சாலையை செப்பனிட கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story