வாணியாறு தடுப்பணையில் மூழ்கி தொழிலாளி பலி

x
தினத்தந்தி 10 April 2022 10:25 PM IST (Updated: 10 April 2022 10:25 PM IST)


வாணியாறு தடுப்பணையில் மூழ்கி தொழிலாளி பலி
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று வாணியாறு தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றார். பின்னர் தடுப்பணையில் குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற ஏ.பள்ளிப்பட்டி போலீசார் பலியான காளியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire