புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

x
தினத்தந்தி 11 April 2022 4:32 AM IST (Updated: 11 April 2022 4:32 AM IST)


புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
துவரங்குறிச்சி:
திருச்சி மாவட்டம், வளநாடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் வளநாடு போலீசார், கைகாட்டி மற்றும் கோவில்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் வளநாட்டை சேர்ந்த திருப்பதி(வயது 42), கைகாட்டியை சேர்ந்த கஸ்தூரி(55) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 22 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire