பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 April 2022 10:27 PM IST (Updated: 11 April 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

தூசி

ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவர் நேற்று  மனைவி ரம்யாவோடு மோட்டார்சைக்கிளில் காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். 

மாமண்டூர் மெயின்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக பின்னால் வந்த ஒரு லாரி திடீரென அவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. 

அதில் பூபாலன், மனைவி ரம்யா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். 

விபத்தைக் கேள்விப்பட்ட மாமண்டூர் கிராம பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு படுகாயம் அடைந்த கணவன், மனைவியை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மாமண்டூரில் விபத்து நடந்த இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் செய்யாறு துைண போலீஸ் சூப்பிரண்டு செந்தில், தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். 

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

 இதனால் அந்தப் பகுதியில் ேநற்று இரவு அரைமணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
1 More update

Next Story