தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.3½ லட்சம் அபேஸ்-சைபர் கிரைம் போலீசார் விசாரணை


தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.3½ லட்சம் அபேஸ்-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.3½ லட்சம் அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி:
தனியார் நிறுவன ஊழியர்
ஓசூர் பாகலூர் சாலை திருப்பதி மெஜஸ்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 46). ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தங்களின் வங்கி கணக்கில் சில தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை நம்பிய மணிகண்டன் அதில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு போன் செய்து பேசினார்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை வங்கி அதிகாரி என்றும், வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை கேட்டார். மேலும் சில செயலிகளை அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்ய கேட்டு கொண்டார். சிறிது நேரத்தில் மணிகண்டனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் தொகை எடுக்கப்பட்டு இருந்தது.
போலீசார் விசாரணை
தொடர்ந்து எதிர்முனையில் பேசிய நபரை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணிகண்டன் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். பணம் அபேஸ் செய்தது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
1 More update

Next Story