வாகனத்தில் அடிபட்டு மான் சாவு


வாகனத்தில் அடிபட்டு மான் சாவு
x
தினத்தந்தி 11 April 2022 11:33 PM IST (Updated: 11 April 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

வாகனத்தில் அடிபட்டு மான் உயிரிழந்தது.

பெரம்பலூர்
பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் நேற்று அதிகாலை ஒரு புள்ளி மான் ஓடி வந்து சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மானின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்ட அந்தப்பகுதி வழியாக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், வாகன ஓட்டிகள் கூடினர். அவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு, கால்நடை மருத்துவர் மூலம் அதனை பிரேத பரிசோதனை செய்து சித்தளி வனப்பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். உயிரிழந்த மான் ஆண் என்றும், அதற்கு சுமார் 4 வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
1 More update

Next Story